நிதர்சனம்

கவிதை எழுத வேண்டும்

கடைசி கவிதை சோகமாய் இருப்பதாய் நண்பன் சொன்னான்

காதல் கவிதை அதிகம் எழுதினால்

காதலி யார் என்ற கேள்வி வரும்

இலங்கை தமிழன் பற்றி எழுத

நான் என்ன தன்மான சிங்கமா

நான் பச்சை தமிழன்

அரசியில் கவிதை எழுத ஆரம்பித்து

பின்பு அரசியிலில் என்ன கவிதை வேண்டிக்கிடக்கிறது

என்று எழுதின பக்கத்தை கிழித்தேன்

மழை

பேருந்து அழகி

நிலவு

பல் குத்தும் தாத்தா

பசி , பிள்ளை சிரிப்பு எல்லாம் தவிர்த்து

அரை மணி நேரம் “எது கவிதை ” என்று ஆரம்பித்த

வெறும் பக்கத்தை பார்த்து கொண்டே

அப்படியே தூங்கிப்போனேன்

“ஏன்டா 3 மாசம் வாடக பாக்கி

உனக்கு கவித ஒரு கேடா”

திட்டி எழுப்பினார் வீட்டுக்காரர்

தலைப்பு கிடைத்து விட்டது !!

இங்கே பதிக்கப்ட்டது: on April 17, 2010 at 6:01 பிற்பகல்  கருத்துத் தெரிவிக்கவும்  

வருகை பதிவு

இன்று அது கண்டிப்பாக நிகழ்ந்திருக்கிறது…

எப்போதும் போல  இல்லை நான்

ஏதோ ஒரு புது உற்சாகம்

ஒரு புது உணர்வு

ஐந்து ஆண்டு காத்திருப்பில்

இன்று அது கண்டிப்பாக நிகழ்ந்திருக்கிறது ..

அவரிடம் சொல்ல வேண்டும்

“உனக்கு நான் எனக்கு நீ” என்று அலுத்து போகாமல் சொன்னதால்

அத்தையிடம் சொல்ல வேண்டும்

இந்த நொடி வரை அவரின்

“வெருநிலம்” வசவு  சுட்டுக் கொண்டே இருப்பதால் …

அம்மாவிடம் சொல்ல வேண்டும்

எனக்காக ஏதேதோ விரதமெல்லாம் இருந்தாள்..

கடவுளே மறந்தே விட்டேன்

முதலில் மும்மத கோயிலுக்கும் சென்று

முறையாக நன்றி சொல்லிவிட வேண்டும்

கோயிலுக்கு போய் விட்டு

உறுதி செய்ய செக்கப்பிற்கு போனேன்

சாதரணமாய் சொன்னார் டாக்டர்

“எப்பவும் போல தான் மா பித்தம்”

வெருநிலம் என்று உரக்க யாரோ கூப்பிடுவது போல் இருந்தது

வரும் வழியில் மீண்டும் “வெரும்”சாமியை

பார்த்து நன்றி சொல்லிவிட்டு வந்தேன்…

இங்கே பதிக்கப்ட்டது: on April 17, 2010 at 5:25 பிற்பகல்  கருத்துத் தெரிவிக்கவும்  

காதலாகி …

புதிதாய் தொலைத்ததை தேடும் போது

என்றோ தொலைத்தது கிடைப்பது போல்

எனக்கு கிடைத்திருக்கிறாய் நீ…

நீ என்னை பார்த்து போன

நாட்கள் எல்லாம்

நடுப்பக்கத்தில் வைத்த மயிலறகாய் இருக்கிறது …

நாம் நடந்து செல்லும் போது

உனக்கு தெரியாமல்

மெதுவாய் திரும்பி பார்க்கிறேன்

நம் கால் தடங்களை ..

அருகருகே அழகாய் நிரம்பி இருக்கிறது காதல் …

நீ தான் என்று தெரிந்த பின்

நகரும் நாட்கள் எல்லாம்

ஒரு மதிய  வெயிலில் தூறும் மழை போல் இருக்கிறது …

பழக்கம் இல்லை என்றாலும்

பழகியதால்  பிடித்து  விட்டது

சிறகில்லாமல் பறப்பதும்

நினைத்தவுடன் என்னருகில்

வந்து நீ சிரிப்பதும் …

இங்கே பதிக்கப்ட்டது: on April 16, 2010 at 6:50 பிற்பகல்  மறுமொழிகள் (2)  

இனி நானும் நீங்களும்

எல்லோர் மனத்திலும் எங்கோ ஒளிந்திருக்கும் அந்த புத்தக நடுவில் மறைத்து வளர்த்த மயிலரகின் வாசம் போல.. என்னுள்ளும் மறைந்து இருக்கும் வாசத்தை நுகரும் தேடலே இந்த முயற்சி..
கிறுக்கலாக இருப்பின் மறந்து போங்கள் …

கவிதையாக இருப்பின் மெய் மறந்து போங்கள்…

குப்பையாக இருப்பின் என் மர மண்டையில் குட்டி விட்டு  போங்கள் …
(அ)எப்படியாவது படித்து விட்டு போங்கள்…

இங்கே பதிக்கப்ட்டது: on மார்ச் 8, 2010 at 3:27 பிற்பகல்  மறுமொழிகள் (2)  
Follow

Get every new post delivered to your Inbox.